Sunday, January 15, 2012

தளிர்களின் சுமைகள் கவிதை நூல் வெளியீடு

திருமதி.சுமதி குகதாசன் அவர்களின்  'தளிர்களின் சுமைகள்' கவிதை நூல்எதிர்வரும் ஞாயிறு வெளியிடப்படுகிறது.


இளைப்பாறிய ஆசிரியரான அவரது முதலாவது நூல் இது. இவர் வடபுல இடதுசாரி முன்னோடியான தோழர் கார்த்திகேசன் அவர்களது புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியரும், இடதுசாரி அரசியல்வாசியுமான கார்த்திகேசன் மாஸ்டர் ஒரு கவிஞரும் என்பதும் நினைவு கூரவேண்டியதாகும்.


கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் (7, 57வது ஒழுங்கை, வெள்ளவத்தை) எதிர்வரும் ஞாயிறு(21.01.2012) மாலை 5 மணிக்கு வெளியீட்டு விழா ஆரம்பமாகிறது.

திரு.க.சிவபுத்திரன் (ஆசிரியர்) தலைமையில் நடைபெறும் விழா நடைபெறும்.

நூல் வெளியீட்டுரையை திரு.சிவா சுப்பிரமணியம்  (முன்னாள் தினகரன் ஆசிரியர்) ஆற்றுவார்.


கருத்துரைகள்
  • திரு.வீ.தனபாலசிங்கம் தினக்குரல் பிரதம ஆசிரியர், 
  • நெடுந்தீவு செ.மகேஸ் (இளைப்பாறிய ஆசிரியரும் கவிஞரும்),
  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன் 
ஆகியோர் ஆற்றுவார்கள்.
நூலாசிரியை திருமதி.சுமதி குகதாசன் ஏற்புரையை நிகழ்த்துவார்.


இந் நூல் வெளியீட்டுக்கான ஏற்பாடுகள் முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் ஆதரவில் செய்யப்படுகி்னறன.

0.0.0.0.0.0

Post Comment

1 comments:

sutharmamaharajan said...

viza sirappaga nadaipera en vaazthukkaz.

Post a Comment

உங்கள் எண்ணங்கள், விமர்சனங்கள் என்னைச் சிந்திக்கத் தூண்டும்.