நண்பர்கள் அனைவருக்கும் எனது
இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்
![]() |
| http://files.myopera.com/Joa-o/blog/35_merry_christmas.gif |
இந்த மகிழ்ச்சியான நாளில் ஒரு இனிய கிறீஸ்தவ கீதம்.
எத்தனை முறை கேட்டாலும் மனத்தை நிறைக்கும் பாடல்
சென்ற ஆண்டு யாழ்ப்பாணம் சென்றபோது மணற்காடு கிராமத்திற்கு செல்லக் கிடைத்தது. சிறிய கரையோரக் கிராமம். பெரும்பாலும் கத்தோலிக்க கிறீஸ்தவர்கள். மிகவும் அன்பும், கனிவும் கொண்டவர்கள். கடற்தொழில்தான் பிரதான தொழில்.
![]() |
| மணற்காடு தேவாலயம் |
கடற்கரைக்குச் சென்று திரும்பும்போது சேர்ச் அருகே வந்தோம். பிரமாண்டமான அழகிய தேவாலயம். எதிரே பெரிய மைதானம். அதில் இளைஞர்கள் அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருந்தனர்.
சென்ற தலைமுறையினர் எனக்கு நன்கு பழக்கமானவர்கள். ஆபிரகாம், பெனடிக்ட், திரேசா... இப்படி எத்தனையோ பெயர்கள் இன்றும் மனத்தில் நிறைந்து நிற்கிறது. இவர்களில் பெரும்பாலனவர்கள் இன்று இல்லை. அல்லது புலம்பெயர்ந்து சென்றுவிட்டார்கள்.
ஆயினும் சென்ற 10-15 வருடங்களாக பருத்தித்துறையில் நான் இருக்கவில்லை, மருத்துவப் பணியாற்றவில்லை. இதனால் அங்கிருந்த இளைஞர்களை என்னால் அடையாளம் காண முடியவில்லை.
தேவாலய முன்றலுக்கு வந்தோம். வாயிற் கதவு சாத்தியிருந்தது.
"கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் .." பாடல் ஞாபகத்தில் வந்தது. ஆயினும் தட்டிப் பார்க்கவில்லை.
வெளியே நின்றபடியே சில படங்கள் எடுத்துக்கொண்டோம்.
இந்தப் புனிதமான இனிய நாளில் அந்தக் கோவிலும் அந்த மக்களும் மனதில் நிறைந்து நிற்கின்றனர்.
சுனாமியால் அந்த மக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். பலர் மரணித்தனர். ஆயினும் அந்த மக்கள் துவண்டுவிடவில்லை. மீண்டு எழுந்தனர். தமது கிராமத்தை மீள அமைத்தனர். அந்த தேவாலயம் பாதிப்புறவில்லை.
இப்பொழுது புதிதாக வர்ணமடிக்கபட்டு கவர்ச்சியாக இருக்கிறது.
அவர்களுக்கும்
எனது அனைத்து நண்பர்களுக்கும்
இனிய நத்தார் தின வாழ்த்துக்களும்,
வரப்போகின்ற புத்தாண்டிற்கான
வாழ்த்துக்களும்.
0.0.0.0.0.0






3 comments:
முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.
http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html
மக்களின் நம்பிக்கை போல நிமிர்ந்து நின்று அழகுற மிளிரும் தேவாலயப் படங்கள் அனைத்தும் அழகோடு இதம். நண்பர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.
நன்றி கீதா. உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
Post a Comment
உங்கள் எண்ணங்கள், விமர்சனங்கள் என்னைச் சிந்திக்கத் தூண்டும்.