Monday, November 23, 2009

எடையைக் குறைக்க ...சில அற்புத வழிகள்

எடையைக் குறைப்பதற்கான மருந்துகளுக்கு ஏகப்பட்ட கிராக்கி.

கடுகு எண்ணெயைக் கப்சியூல் ஆக்கி, எடை குறைக்கும் மருந்து என தொலைக்காட்சியில் நிறைய விளம்பரம் கொடுத்து விற்றதால் ஒருவர் பெரும் பணக்காரர் ஆனாராம்.

இதைக் கேள்விப்பட்ட டாக்டர் தானும் ஏதாவது செய்ய வேண்டும் என உளங் கொண்டார்.

தனது கிளினிக் வாசலில் ஒரு விளம்பரம் போட்டார்.

உள்ளே நுழைந்தால் இப்படி ஒரு மருந்து கிடைக்கிறது.



எடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்களால்
இந்தக் கண்ணாடிக் கடைக்காரருக்கு
அமோக வியாபாரம்.
"என்ன எனது எடை அதிகரித்துவிட்டதே!"

"சோறு சாப்பிடாமல் கேக் சாப்பிட்டு,
பால் குடியாமல் கோக் குடித்து,
மீன் சாப்பிடாமல் சொசேசஸ் சாப்பிட்டு
பத்தியம் இருந்தும் இப்படியாகிவிட்டதே"

என அதிசயித்த பெண்ணுக்கு தனது எடை உயர்ந்ததற்கான காரணம் இப்பொழுது புரிந்தது!!!!!

பிள்ளைகள் கொழுப்பதற்கு எத்தனையோ காரணங்கள்.

ஆனால் இந்த அம்மாவின் குழந்தை, கவலையால் கொழுத்ததாம்
இவர் தனது உணவில் மிகக் கவனம்.
அதிகம் சாப்பிடுவதில்லை.
சின்னச் சாப்பாடுதானாம்.
அதிகம் சமைப்பதும் இல்லை.
ஆனாலும் எப்படி எடை அதிகரிக்கிறது என்பது அவருக்கும் புரியவில்லை.

இந்த அம்மா எடையைக் குறைப்பதற்கு காலை முதல் இரவு வரை முயற்சி செய்து கொண்டிருக்கிறாள்.

முழுநேர உடற் பயிற்சிதான். உடற் தசைகளுக்கு. ஆயினும் அவளது எடை குறையவில்லை.

காலை முதல் இரவு வரை கால்களுக்குப் பயிற்சி.

உட்கார்ந்த இடத்திலிருந்து கால்களை ஆட்டியபடியே இருக்கிறாள்.

அது மட்டுமல்ல மற்றொரு தொகுதி தசைகளுக்கும் ஓயாத பயிற்சி.

ஆம் வாய்த் தசை நார்களுக்குத்தான்.

மகன் நன்றாகச் சாப்பிட வேண்டும் என்ற கவலை இந்த அம்மாவுக்கு.
தனது ஆசை தீர மகனுக்கு உணவு அளிக்கிறாள்.
ஆனாலும் சாப்பிடுவது வலு குறைவென்ற கவலை.


என்ன கார்ட்டுன்கள் போட்டிருக்கிறார்.
சிரிப்பே வரவில்லை என்கிறீர்களா?

எனக்கு இவற்றைப் பார்க்கும் போது கவலைதான் வருகிறது.

"இலஞ்சம் கொடுத்தாவது
சொர்க்கத்திற்கு விரைந்து போக
வழி தேடுபவர்களைப் பார்த்தால்
சிரிப்பா வரும்?"

எம்.கே.முருகானந்தன்.

Post Comment

6 comments:

மங்களூர் சிவா said...

உண்மைதான் டாக்டர். வேண்டாம் என சொல்லாத வாயும் துரும்பும் அசைக்காத உடம்பும் எப்படி எடை குறையும்?

நல்ல பதிவு.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் உடல் சரியான வழியில் இயங்குவதற்கும் உள்ளம் உற்சாகத்தோடு இயங்குவதற்கும்
எடை குறைவு தேவை.

சாப்பிடும் ஒவ்வொரு வேளையும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

bala said...

நீங்கள் சொல்வது சரிதான் டாக்டர்.
எங்கள் வீட்டு பெரியோர்கள் சொல்வார்கள்
பசி வந்த பின் வாயில் கை வை.
பசி அடங்கும் முன் வாயில் இருந்து கையை எடுத்து விடு.

bala said...

நீங்கள் சொல்வது சரிதான் டாக்டர்.
எங்கள் வீட்டு பெரியோர்கள் சொல்வார்கள்
பசி வந்த பின் வாயில் கை வை.
பசி அடங்கும் முன் வாயில் இருந்து கையை எடுத்து விடு

Dr.எம்.கே.முருகானந்தன் said...

கருத்துரைகளுக்கு நன்றி மங்களூர் சிவா, வல்லிசிம்ஹன்,மற்றும் bala.

Chitra said...

Great ones.... சிரிக்க .... சிந்திக்க ....

Post a Comment

உங்கள் எண்ணங்கள், விமர்சனங்கள் என்னைச் சிந்திக்கத் தூண்டும்.